கொழும்பு உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள இத்தாலி தூதரக கிளையில் சேவைகளை பெறுவதில் மக்கள் அசௌகரியம்!
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக உலக வர்த்தக மைய பகுதியில் தங்கியுள்ள அவர்கள், விசா பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலே வருகை தந்ததாக தெரிவித்தனர்.
இதற்காக பல தடவைகள் அந்த அலுவலகத்திற்கு சென்ற போது, பொறுப்பற்ற வகையில் அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும் அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனிடையே, குறித்த அலுவலக அதிகாரிகள் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட முயற்சித்த போதும் அது கைகூடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment