PointPedrO.com
Headlines News :

Latest Post

சர்ச்சையை ஏற்படுத்தும் பரதேசி உருவான விதம்

Written By KAJANTHAN JS on Saturday 16 March 2013 | 07:59



பாலாவின் படைப்புக்களுக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. அதேபோல பலாவிற்கு ஒரு கொடூர முகமும் உண்டென அடிக்கடி தகவல்கள் வெளியாது வழக்கம்.
இதனை உண்மைப்படுத்துவது போல தற்போது பலா இயக்கியுள்ள பரதேசி படத்தின் உருவான விதம் என்ற வீடியோ அமைந்துள்ளது. அதாவது படத்தினை  உருவாக்கும் போது பாலா நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது கொலைவெறியாக தாக்கி திட்டித் தீர்க்கிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் தொடர்ந்து படத்தின் பாத்திரங்கள் செய்வது போன்று காட்டப்படுகிறது. இந்த வீடியோவை பரதேசி படக்குழுவே ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பாலா படமெடுக்கிறார் என்ற பெயரில் மனிதர்களை மாடு போல் நடத்துகிறார் என ஒரு குழு ஆவேசமாக புறப்பட்டுள்ள இந்நிலையில் இந்த வீடியோ மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்திற்கு எப்படி யூ சான்றிதழ் வழங்குவது என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. ஒருவேளை தணிக்கை குழு பற்றி அமீர் கூறியவை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது
.

மதிலேறி குதித்துத் தப்பித்த விஜய்



விஜய் நடத்தி வைத்த திருமண வைபவத்தின் போது கதவுகளை உடைத்துக்கொண்டு திடீரென மண்டபத்தினுள் நுழைந்த விஜய் ரசிகர்களால் அதிர்ச்சிக்குள்ளாகி மதிலேறி குதித்துத் தப்பித்துச் சென்றுள்ளார் விஜய்.


நடிகர் விஜய் நேற்று 11 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைத்தார். இதன்போது ஏற்பட்ட கலாட்டாவிலே விஜய் மதிலேறிக்குதித்து தப்பித்துள்ளார். இச்சம்பவத்தின் போது மண்டபத்திலிருந்த பத்திரிகையாளர்கள், புரோகிதர்கள் மற்றும் பலர் கண்ணாடி சிதறியதில் ஏற்பட்ட காயத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.


இவ்வாறு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் எனக் கருதியே பத்திரிகையாளர்கள் தவிர 700 பேருக்கு மாத்திரம் இத்திருமண வைபவத்திற்கு அழைப்பு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இத்திருமண வைபவம் குறித்து அறிந்து கொண்ட சுமார் 1500 வரையிலான விஜய் ரசிகர்கள் அங்கு குழுமியுள்ளனர்.


இதன் பின்னர் அங்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு மண்டபத்தினுள் சென்று திருமணத்தை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே விஜயின் ரசிகர்கள், தலைவா எனக் கோசமிட்டுக்கொண்டு அதிரடியாக உள்நுழைந்து கதிரைகள், கதவுகள் மற்றும் கண்ணாடிகள் என உடைத்து கலாட்டா செய்துள்ளனர்.


ஆனால் இவ்வாறு அடிதடியாக விஜயை நெருங்க முயன்ற விஜய் ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் பிரச்சினை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஏனையோர்களுடன் சேர்ந்து விஜயும் மதிலேறிக் குதித்த தப்பித்துவிட்டார். பின்னர் விஜயை அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வழியனுப்பி
 

பெண்களை கற்பழித்து கொன்று சமைத்துச்சாப்பிட்ட பொலிஸ்

Written By KAJANTHAN JS on Monday 4 March 2013 | 03:35


அமெரிக்காவில் பெண்களை கடத்தி கற்பழித்து அவர்களை கொலை செய்து அவர்களின் நரமாமிசத்தை நியூயார்க்கை சேர்ந்தவர் கில்பெர்டோ வல்லே (32). போலீஸ் அதிகாரி மைத்து சாப்பிட்டார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளாதுடன் இவர் மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் போது சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது தான் அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது, அதில் அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக கூறி பயத்தின் மிகுதியில் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தியதுடன் இவரது சாட்சியம் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு எதிராக கடும் ஆதாரமாக உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சாரதியாக ஆசைப்படும் யாழ்ப்பாணத்தார்.


யாழ். மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 60 ஆயிரத்தி 732 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 டிசம்பர் வரை இந்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த விண்ணப்பங்களின் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் 38 ஆயிரத்து 252 பேருக்குதற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு 5255 விண்ணப்பங்களும், 2010 ஆம் ஆண்டு 14440 விண்ணப்பங்களும்,2011 ஆம் ஆண்டு 19575 விண்ணப்பங்களும், 2002 ஆம் டிசம்பர் வரை 21462 விண்ணப்பங்களும் கிடைக் கப்பெற்றுள்ளன. இதில் 2009 ஆம் ஆண்டு 3362 பேருக்கும், 2010 ஆம் ஆண்டு 5646 பேருக்கும், 2011 ஆம் ஆண்டு 11931 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு 17313 பேருக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்துடன் குறித்த காப்பகுதியில் யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் ஊடாக 6082 மோட்டார் சைக்கில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்தது



Print


தெற்கு அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று (21) இரவு தீ பிடித்து எரிந்துள்ளது.

காலியில் இருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

தொடங்கொட 29ஆம் கிலோ மீற்றர் பகுதியில் இடம்பெற்ற இத்தீ விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

விமலை நம்பி நான் இல்லை : ஓவியா


களவாணி படத்தில் விமலுடன் ஜோடியாக நடித்தவர் ஓவியா. கேரளத்து வரவான இவருக்கு அதன்பிறகு சிறிய தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மீண்டும் அதே விமல் நடித்த கலகலப்பு படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை பரபரப்பாக்கிக் கொண்டார்.
அத்தோடு, அப்படத்தின் இன்னொரு நாயகியான அஞ்சலியுடன் போட்டி போடுவது போல் ஓவர் கிளாமர் காட்டி நடித்து, என்னாலும் கிளாமர் நாயகியாக முடியும் என்பதை நிரூபித்தார்.

அதற்கடுத்தபடியாக மீண்டும் அதே விமலுடன் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி தொடர்ச்சியாக விமல் படங்களில் ஓவியா நடிப்பதால், அவருக்கு விமல் சிபாரிசு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இதுபற்றி ஓவியாவைக் கேட்டால், இந்த கதைக்கு ஓவியா நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற பட்சத்தில் டைரக்டர்களாக என்னை அழைக்கிறார்கள். இதுவரை நான் நடித்த எல்லா படங்களிலும் அப்படிதான் வாய்ப்புகள் வந்தன. அதனால் விமல் சொல்லித்தான் எனக்கு படவாய்ப்பு கிடைக்கிறது என்பதில் துளியும் உண்மை இல்லை. மேலும் இந்த சினிமாவில் நான் என்னையும், எனது திறமையையும் நம்பித்தான் இருக்கிறேன். விமலை நம்பி இல்லை என்கிறார் ஓவியா.

கோப்பாய் விபத்தில் துடிதுடித்து பிரிந்த உயிர்!


யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவு கோண்டாவில் சந்தியருகில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேற்றிரவு 10 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அடங்குவதுடன் இவர்களில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், ஏனைய நால்வரும் திடீர் கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Misteri

PintPedrO.com. Powered by Blogger.

Settai

Kadal

ABCD

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger