மாம்பழத்தால் வந்த வினை: இருவருக்கு 25000 ரூபா பிணை - PointPedrO.com
Headlines News :
Home » » மாம்பழத்தால் வந்த வினை: இருவருக்கு 25000 ரூபா பிணை

மாம்பழத்தால் வந்த வினை: இருவருக்கு 25000 ரூபா பிணை

Written By KAJANTHAN JS on Thursday 21 February 2013 | 07:30


மாம்பழத்தால் வந்த வினை: இருவருக்கு 25000 ரூபா பிணை

மாம்பழம் ஒன்றினால் ஏற்பட்ட பிரச்சினையால் இருவருக்கு 25 ஆயிரம் ரூபா சரரீரப் பிணை வழங்கப்பட்ட சம்பவம் களுபோவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது,
களுபோவில வைத்தியசாலை வளாகத்தில் உள்ள மா மரம் ஒன்றில் மாம்பழத்தை அங்கு பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் பறித்தார் என மற்றுமொரு சிற்றூழியர் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிவடைந்துள்ளது.
இதனையடுத்து சிற்றூழியர்களான ஆர்.டி.ஜே.ராஜபக்ஷ, இந்திக ராஜபக்ஷ அஜித் ஆகிய இருவரையும் கைது செய்த பொலிஸார், நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் எம். மாரசிங்க இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா சரரீரப் பிணை வழங்கி விடுவித்துள்ளார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger