படுக்கையறைகளில் புலிக்குட்டிகளுடன் உறங்கும் நபர்
புலி என்ற பெயரைக் கேட்டாலே நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனாலும் பிரித்தானியாவைச் சேர்ந்த பென் வரென் என்பவர் படுக்கையறையில் இரு புலிக் குட்டிகள் சகிதம் உறங்கி வருகிறார்.
கென்ட் நகரிலுள்ள ஹவ்லெட்ஸ் வனப்பூங்காவில் பணியாற்றும் இவர் மேற்படி இரு புலிக் குட்டிகளும் பிறந்தது முதல் தன்னுடனேயே வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
குட்டிகள் பிறந்தபோது தாய்ப்புலி அவற்றை ஏற்க மறுத்ததால் பராமரிக்கும் பொறுப்பை பென் வரென் ஏற்றுக்கொண்டார்.
இந்தப் புலிக் குட்டிகளுக்கு தினசரி இரு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment