Home »
» கோச்சடையான் படக்குழுவினர் மகிழ்ச்சி
கோச்சடையான் படக்குழுவினர் மகிழ்ச்சி
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை காலை முழுப் படத்தினையும் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் பார்த்து முழுத் திருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து கோச்சடையான் கதாசியர் கே.எஸ். ரவிக்குமார் கூறுகையில், எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறுகையில், என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும், படம் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன் படத்தின் இயக்குனர் சௌந்தர்யாவையும் பாராட்டியுள்ளார் ரஜினி.
தமிழ், தெலுங்கு , ஹந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ள கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்றுவருகிறது.
சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ஆர். சரத்குமார், தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெரொப், ஆதி, நாசர், ஷோபனா மற்றும் ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி அன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் ஆரம்பமாகியது.
பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் சில நாட்கள் திருவனந்தபுரத்திலும் படப்பிடிப்புக்களை நடத்தி படப்பிடிப்புக்களை நிறைவுக்கு கொண்டுவந்தனர் கோச்சடையான் படக்குழுவினர்.
தொடர்ந்து அவதார், டின் டின் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கெப்சரிங் தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி படத்தினை சிறப்பாக வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோச்சடையான் படத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விபவரம் வருமாறு,
கலை - வேலு,
நடனம் - சரோஜ்கான், சின்னிபிரகாஷ், ராஜுசுந்தரம்
உடைகள் வடிவமைப்பு - நீத்தா லுல்லா
சண்டைபயிற்சி - மிராக்கிள் மைக்கேல்
படத்தொகுப்பு - ஆன்டனி,
ஒலிப்பதிவு - ரஸுல் பூக்குட்டி
தயாரிப்பு மேற்பார்வை - உதயக்குமார்
பாடல்கள் - கவிஞர் வாலி, கவியரசு வைரமுத்து
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் - சு. மாதேஷ்
இசை - இசைப்புயல் ஏ.ஆர். .ரஹ்மான்
கதை திரைக்கதை வசனம் - கே.எஸ். ரவிக்குமார்
இயக்கம் - சௌந்தர்யா ஆர் அஷ்
வி
No comments:
Post a Comment