மனைவி, குழந்தையை கொன்ற பின்னரே கணவன் தூக்கிட்டு தற்கொலை - PointPedrO.com
Headlines News :
Home » » மனைவி, குழந்தையை கொன்ற பின்னரே கணவன் தூக்கிட்டு தற்கொலை

மனைவி, குழந்தையை கொன்ற பின்னரே கணவன் தூக்கிட்டு தற்கொலை

Written By KAJANTHAN JS on Saturday 2 March 2013 | 17:44


பாணந்துறைப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில், கணவனால் மனைவி மற்றும் அவர்களது குழந்தை கொலை செய்யப்பட்ட பின்னர் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பாணந்துறைப் பகுதியில் தாய், தந்தை மற்றும் எட்டு மாதக் குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீடொன்றிற்குள் இருந்து நேற்று மீட்கப்பட்டன.


119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அப் பிரதேச மக்கள் அறிவித்தமையை அடுத்து மேற்படி வீட்டிலிருந்து அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன.
Pics By:J.Sujeewakumar

தற்கொலை செய்துகொண்ட 40 வயதுடைய நிரோசன் இந்திக என்பவர் தனது மனைவியான 35 வயதுடைய சிராணி பத்மலதா மற்றும் எட்டு மாதக் குழந்தையை கொலை செய்துள்ளார். மனைவியின் கழுத்தை கூரிய கத்தியால் வெட்டியுள்ளதோடு குழந்தையை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.



மாத்தறையிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்த இவர்கள் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேற்படி வீட்டுக்கு வாடகை கட்டாமல் இருந்துள்ளதோடு பல கடன் சுமைகளும் அதிகரித்துள்ளன.

இதனால் கடன்கொடுத்தவர்கள் தினமும் வந்து வீட்டிமுன் கூச்சலிடுவதாகவும் இதனால் இவர்கள் சங்கடத்துக்கு உள்ளாகுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மனைவி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 தொடர்புடைய செய்தி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் பாணந்துறையில் மீட்
பு

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger