Home »
» மதிலேறி குதித்துத் தப்பித்த விஜய்
மதிலேறி குதித்துத் தப்பித்த விஜய்
விஜய் நடத்தி வைத்த திருமண வைபவத்தின் போது கதவுகளை உடைத்துக்கொண்டு திடீரென மண்டபத்தினுள் நுழைந்த விஜய் ரசிகர்களால் அதிர்ச்சிக்குள்ளாகி மதிலேறி குதித்துத் தப்பித்துச் சென்றுள்ளார் விஜய்.
நடிகர் விஜய் நேற்று 11 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைத்தார். இதன்போது ஏற்பட்ட கலாட்டாவிலே விஜய் மதிலேறிக்குதித்து தப்பித்துள்ளார். இச்சம்பவத்தின் போது மண்டபத்திலிருந்த பத்திரிகையாளர்கள், புரோகிதர்கள் மற்றும் பலர் கண்ணாடி சிதறியதில் ஏற்பட்ட காயத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் எனக் கருதியே பத்திரிகையாளர்கள் தவிர 700 பேருக்கு மாத்திரம் இத்திருமண வைபவத்திற்கு அழைப்பு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இத்திருமண வைபவம் குறித்து அறிந்து கொண்ட சுமார் 1500 வரையிலான விஜய் ரசிகர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
இதன் பின்னர் அங்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு மண்டபத்தினுள் சென்று திருமணத்தை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே விஜயின் ரசிகர்கள், தலைவா எனக் கோசமிட்டுக்கொண்டு அதிரடியாக உள்நுழைந்து கதிரைகள், கதவுகள் மற்றும் கண்ணாடிகள் என உடைத்து கலாட்டா செய்துள்ளனர்.
ஆனால் இவ்வாறு அடிதடியாக விஜயை நெருங்க முயன்ற விஜய் ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் பிரச்சினை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஏனையோர்களுடன் சேர்ந்து விஜயும் மதிலேறிக் குதித்த தப்பித்துவிட்டார். பின்னர் விஜயை அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வழியனுப்பி
No comments:
Post a Comment